ராமநாதபுரம் மாவட்டம் அண்ணா நகர் குட்ஸ் ஷெட் தெருவில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?