புகார் எதிரொலி

Update: 2026-07-12 10:39 GMT

சென்னை தியாகராயநகர், பிஞ்சாலா சுப்ரமணியம் தெருவில் உள்ள மழைநீர் சேகரிப்பு கால்வாயின் மூடி சேதமடைந்து இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மழைநீர் சேகரிப்பு கால்வாயின் மூடியை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்