ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் ஊராட்சி லட்சுமியாபுரம் கிராம சாலையில் போதிய வடிகால் வசதி இன்றி கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த சாலையானது சுற்றியுள்ள பல கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக உள்ளதால் இந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை அகற்றவும் கூடுதல் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.