பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு கலங்கு தெருவில் ராமர் பஜனை கோவில் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வலுவிழந்து இடிந்து சேதமாகி விட்டது. இதுகுறித்து கவுன்சிலர், பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுத்து புதிய கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?
-சுந்தரமூர்த்தி, பள்ளிகொண்டா.