ஈரோடு சூளை காவிரி நகர் முதல் வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. ஆனால் இந்த கால்வாய் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் லேசான மழை பெய்தாலும் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களால் சாலையில் நடந்து செல்ல முடியவில்ைல. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயை முறையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.