சுகாதார சீர்கேடு

Update: 2026-06-28 11:16 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டையில் கே.கே.நகர் செல்லும் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. மேலும், அந்த இடத்தில் குப்பைகளும் குவிந்து கிடப்பதால் சாக்கடை நீர் வழிந்து தெருக்களிலும் செல்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கியுள்ள சாக்கடை நீர் மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்