சீரமைக்கப்பட்டது

Update: 2026-06-28 09:49 GMT

ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே பூதநாதசிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் எதிரே கழிவுநீர் வடிகால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோட வழியின்றி சாலையில் பாய்ந்தது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிகுள்ளாகி வந்தனர். இதுபற்றி தினந்தந்தி புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடையை தூர்வாரி சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்