பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமம் 3-வது வார்டு கீழத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிறது. இங்கு இதுவரை கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாததால், கழிவுநீர் தெருவின் நடுவிலேயே ஓடி எப்போதும் சேரும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயம் அடைவதோடு, தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் பெருகி அடிக்கடி விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.