திறந்தவெளி கால்வாய் மூடப்படுமா?

Update: 2023-03-22 16:48 GMT

வாலாஜா பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான பழைய வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் பக்கத்தில் பிளாட்பாரம் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு பலகை உடைந்ததால் திறந்தவெளி கால்வாயாக மாறிவிட்டது. கால்வாய் தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் நேரத்தில் கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக செல்வோர் தவறி கால்வாயில் விழும் அச்சமும் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் திறந்த வெளி கழிவுநீர் கால்வாயை மூட முன்வருவார்களா?

-வீராசாமி, வாலாஜா.

மேலும் செய்திகள்