கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்படுமா?

Update: 2023-02-05 17:18 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் பின்பக்கம் அனந்தலை கிராம எல்லைக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் இதுவரை கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் தெருக்களிலேயே கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு, கொசு உற்பத்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கால்வாய்கள் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சேகர், வாலாஜா.  

மேலும் செய்திகள்