கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2024-01-21 17:24 GMT

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரத்தில் இருந்து பொம்மிக்குப்பம் செல்லும் சாலையில் ப.முத்தம்பட்டி கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அந்தக் கிராமத்தில் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தக் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எருதுவிடும் விழாவுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்.

-முருகன், வெங்களாபுரம்.

மேலும் செய்திகள்