கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

Update: 2023-10-15 17:45 GMT

வாலாஜா புதிய பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் திருவள்ளுவர் நகர் உள்ளது. அங்குள்ள தெருக்களில் கால்வாய்கள் கட்டப்படாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். கொசு தொல்லை அதிகமாக உள்ளது. திருவள்ளுவர் நகரில் கழிவுநீர் கால்வாய்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணமூர்த்தி, வாலாஜா. 

மேலும் செய்திகள்