வேலூர் கொசப்பேட்டை தென்னமரத் தெருவில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறது. தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வின்சென்ட், வேலூர்.