பாதாள சாக்கடை மூடியை மாற்ற வேண்டும்

Update: 2023-04-19 16:37 GMT

திருவண்ணாமலை நகராட்சி 9-வது வார்டு தியாகி.அண்ணாமலை நகர் பகுதியில் ஒரு இடத்தில் பாதாள சாக்கடை மூடி உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து கொசுக்கள், விஷ பூச்சிகள், விஷ வாயுக்கள் வெளியேறுகிறது. இதனால் மக்களுக்கு நுரையீரல், மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை மூடியை மாற்றியமைக்க வேண்டும்.

-ராஜன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்