வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும். பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் அமைந்துள்ளது. அந்த மையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் சில இடங்களில் உடைந்துள்ளது. சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் இல்லாமல் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் காணப்படுகிறது. அதன் அருகே பலர் நடந்து செல்கின்றனர். அவர்கள் தடுமாறி கால்வாயில் விழ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபா, வேலூர்.