தேங்கிய கழிவுநீரால் கொசுத்தொல்லை

Update: 2026-04-26 15:55 GMT

கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி ஊராட்சி பண்டுதகாரன் புதூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் பல வருடங்களாக தேங்கி இருப்பதால், அந்த நீர் பச்சை நிறாமாக மாறி இருக்கிறது. இதில் கொசு அதிகளவு உற்பத்தியாகி ஊருக்குள் பரவி உள்ளதால், பல குடும்பங்களில் காய்ச்சல் பரவி, கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று சிக்கிசை பெற்று வருகின்றனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே நோய் பரவாமல் இருக்கவும், தேங்கியுள்ள நீரை அகற்றி பள்ளத்தை மூடவும் சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்