ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் குளத்துமேடு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பக்க கால்வாய் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அதை முழுமையாக நிறைவு செய்யாமல் பாதியிலே கைவிடப்பட்டதால் கழிவுநீர் கால்வாயில் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயில் இருந்து வழிந்து சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. கால்வாயை முழுமையாக நிறைவு செய்து கழிவுநீரை அருகிலுள்ள ஓடையில் இணைத்து விட்டால், தீர்வு கிடைக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சவுந்தராஜன், ஆரணி.