கடலூர் சுப்புராயலு நகா் 23-வது வார்டு பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீரானது வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சேறும, சகதியுமாக காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.