கடலூர் உழவர் சந்தை அருகில் உள்ள சிதம்பரம் சாலையின் ஓரத்தில் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் செடி-கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.