கரூர் மாவட்டம் வெங்கமேடு சின்னகுளத்துப்பாளையம் ரெயில்வே கேட் அருகில் உள்ள பெரிய சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி மழைக்காலங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரினர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.