மழைநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2026-04-26 18:31 GMT

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி நேதாஜிபுரம் டி.என்.இ.பி. காலனி 2-வது தெருவில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. குப்பைகள் மற்றும் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்தால் அடைப்பு ஏற்பட்டு தெருவில் தண்ணீர் வழிந்தோடுகிறது. அத்துடன் குளம் போல் தேங்குகிறது. இதனால் கொசுத்தொல்லை உள்பட பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. எனவே அந்த கால்வாய் முறையாக தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்