சோளிங்கர் நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் திருமண மண்டபங்கள், கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நந்தியாற்றில் விடப்படுகிறது. அது மட்டுமின்றி ஒருசில நேரத்தில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுநீா் நந்தியாற்றில் வெளியேற்றப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.