கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முறையாக திட்டமிடல் இன்றி சாலையின் மேற்பரப்பில் இருந்து 5 அடி ஆழத்தில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கால்வாயில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேங்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.