தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால் கால்வாயில் கழிவுநீர் வழிந்தோடாமல் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன், குப்பைகள் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.