தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2026-09-20 13:59 GMT

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் சரியான சாக்கடை வசதி இல்லை. மேலும் சாலையும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் தார் சாலை மற்றும் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்