கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் பசுமை நகருக்கு முன்புறம் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதியின்றி சாலையில் தேங்கிநிற்கிறது. இதனால் அப்பகுதியில் மழை பெய்யும் போது மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அப்பகுதியில் நிரந்தரமாக கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.