தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அதியமான் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கழிவுநீர் முறையாக செல்ல வழி ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. சாக்கடை கால்வாயிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு, ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என குடியிருப்பு மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.