கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-05-14 17:17 GMT

ராணிப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் தினமும் பலர் உணவு சாப்பிடுகின்றனர். அங்குள்ள உணவுக்கழிவுகள் அருகில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தக் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்