கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-05-14 13:51 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி தரணம்பேட்டை ஜீபேதா நகர் 2-வது தெருவில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், குடியாத்தம். 

மேலும் செய்திகள்