கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-05-03 16:48 GMT

ஆரணிைய அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் முன்பாக சாலையோரம் உள்ள கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததாலும், கால்வாய் சரிவர இல்லாததாலும் கழிவுநீர் எந்த நேரமும் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. கால்வாய்களை முறையாக தூர்வார மாவட்ட நிர்வாகம் ஆரணி நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.

-ராகவேந்திரன், ஆரணி.

மேலும் செய்திகள்