தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-01-11 16:51 GMT

காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையோரம் பஸ் நிலையம்-சந்தைமேடு இடையே கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் ஓரம் அடிக்கடி மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது. அதேநேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது உடைத்து எடுக்கப்பட்ட இரும்பு படிக்கட்டு ஓரமாக வீசப்பட்டு இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மேற்பார்வையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க, முரம்பு மண் கொட்டி சீரமைக்கும் பணி நடந்தது. நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டியதுடன், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

-குமார், சநதைமேடு, ேக.வி.குப்பம்.

மேலும் செய்திகள்