கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2024-08-25 20:59 GMT

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரத்தில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகே கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புருஷோத்தமன், வெங்களாபுரம்.

மேலும் செய்திகள்