ஆற்றில் கழிவுநீர் கலப்பு

Update: 2023-02-22 15:36 GMT

வந்தவாசியில் சுகநநி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆறு மாசு அடைந்து வருகிறது. ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆடு, மாடுகளும் தண்ணீர் குடிக்கின்றன. ஆற்று நீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆற்றில் கழிவுநீரை விடுவோர் மீது சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தன், வந்தவாசி.

மேலும் செய்திகள்