கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2023-02-15 16:54 GMT

கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் ஊராட்சி ரெட்டிபாளையம் கிராமத்தில் ரோட்டுத்தெரு பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதி தூரம் நடந்துள்ளது. தற்போது புதிதாகக் கட்டப்பட்ட கால்வாய் வழியாகக் கழிவுநீர் வெளியேறவில்லை. அங்கு தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முனுசாமி, கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்