கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2022-12-14 11:06 GMT

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி. நகர் பகுதியில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அனைத்துத் தெருக்களிலும் கால்வாய் வசதி முறைப்படுத்தாததால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் தேங்கியும், அதை கூலியாட்கள் மூலம் வெளியேற்றியும் வருகிறார்கள். தற்போது பெய்து வரும் மழையால் கழிவுநீரும், மழைநீரும் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைக்க வேண்டும்.

-பாலாஜி, ஆரணி.

மேலும் செய்திகள்