சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-11-30 12:03 GMT

திருவண்ணாமலை தாலுகா மாதலம்பாடி கிராமத்தில் கருணீகர்தெரு, அம்மன் கோவில் தெரு இணைப்பு பகுதியில் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. பள்ளமாக பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து ஓடைக்கார தெருவை சாலையின் இரு பக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.சின்னத்துரை, மாதலம்பாடி. 

மேலும் செய்திகள்