விவசாய நிலத்தில் புகும் கழிவுநீர்

Update: 2023-06-14 17:02 GMT

கலவை பேரூராட்சி பஜார் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவில் உள்ள பல கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் சுப்பிரமணியர் கோவில் அருகே ஒன்றாகக் கலக்கின்றன. அந்தக் கால்வாய் விவசாய நிலத்தின் அருகே உள்ளது. அதில் ஓடும் கழிவுநீர் மழைக்காலத்தில் அருகில் உள்ள விவசாய விளை நிலத்தில் பாய்கிறது. இதனால் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள், துணிகள் விளை நிலத்தில் புகுந்து பயிரை வளர விடாமல் நாசமாக்குகின்றன. கால்வாயை தூர்வாரி கழிவுநீரை முைறயாக வடிய வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாைய தூர் வார இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஷ்வா என்ற சடையாண்டி, கலவை.

மேலும் செய்திகள்