துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

Update: 2022-10-02 10:01 GMT

காட்பாடி காந்திநகர் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே செல்லும் சாலை ஓரம் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் குப்பைகள் மற்றும் இறைட்சி கழிவுகள் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் கடுமையாக வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்து அங்கு குப்பைகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர். 

மேலும் செய்திகள்