திருப்பூரில் உள்ள பிரதான சாலைகளில் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையும் ஒன்று. இந்த சாலையில் நள்ளிரவு நேரம் மீன்கழிவு நீரை ஊற்றிவிட்டு செல்கிறார்கள். குறிப்பாக கருமாரம்பாளையம் பஸ் நிறுத்தம், பாளையக்காடு பெட்ரோல் விற்பனை நிலைய பகுதிகளில் மீன் கழிவு நீர் ஊற்றப்படுகிறது. இதனால் அந்த சாலையில் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. அப்படியே சென்றாலும் மீன் கழிவு நீரில் இருசக்கர வாகனம் ஏறி, வாகனம் நாற்றம் எடுக்கிறது. மேலும் வாகன ஓட்டி செல்பவர்கள் உடுத்து இருக்கும் துணிகளும் மீன் கழிவு நீரால் நனைந்து நாசமாகிறது. அதன்பின்னர் வாகனத்தை சுத்தம் செய்ய அதிக தொகை செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது. எனவே ஸ்மார்ட் சிட்டியில் நாற்றம் எடுக்கும் அளவுக்கு மீன் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.