உடுமலை அரசு ஆஸ்பத்திரி நுழைவுப் பகுதியில் கழிவு நீர் கால்வாய் சேதமடைந்து அபாய குழியாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் இரவு நேரத்தில் பொதுமக்கள் நிலை தடுமாறியும் வருகின்றனர். எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.