கோவையை அடுத்த போத்தனூர் அருகே மதுக்கரை கால்ப் கிளப் செல்லும் சாலையோரத்தில் மீன், கோழி இறைச்சி கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. அத்துடன் குப்பைகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் கழிவுகளை கொட்டாமல் தடுக்க வேண்டும்.