தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே இளங்கோ நகர் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே இளங்கோ நகரில் கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?