மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு ஆணங்கினற்று தெருவில் சாலையோரம் திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இது பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் அவர்கள் தவறி கீழே விழும் அபாயம் ஏற்படலாம். எனவே இந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?