கோவை பாலசுந்தரம் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து வ.உ.சி. பூங்கா சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து அகற்றிய மண்ணை முறையாக அப்புறப்படுத்தாமல் அங்கேயே அருகில் கொட்டி வைத்து உள்ளனர். மேலும் கால்வாயும் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள மண்ணை அகற்றுவதோடு கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும்.