பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த கழிவுநீர் கால்வாயை மூடுகல் கொண்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சித்தார்த், பேளுக்குறிச்சி.