ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலைகளில் ஆறு போல சாக்கடை நீர் ஓடுகிறது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும் ஊர் முழுவதுமாகவே துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.