செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அம்பிகா நகர் முதல் தெருவில் இருந்து 5-வது தெரு வரையில் கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் 5-வது தெருவில் திறந்த நிலையில் கிடக்கிறது. அந்த கால்வாயில் அதிக அளவு செடி, கொடிகள் வளர்ந்து கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. மேலும், ஏராளமான குழந்தைகள் அங்கு விளையாடுவதால், கழிவுநீர் கால்வாயில் குழந்தைகள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.