கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு நேரு நகர் 2-வது வீதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இதன் அருகில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கழிவுகள் நிறைந்து பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி கால்வாயில் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.