கோவை மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் நேருஜி நகரில் சாக்கடை கால்வாயை தூர்வாரவில்லை. இதன் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும்.