சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-09-15 18:12 GMT

சேலம் மரவனேரி பகுதியில் பள்ளி அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் சரியாக தூர்வாரப்படாததால் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், குப்பைகள் ஆகியவை தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் கால்வாய் ஓரத்தில் பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டன. அவை தற்போது சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குறைகளை சரிசெய்து தர வேண்டும்.

-சேகர், சேலம்.

மேலும் செய்திகள்